இன்றைய காலகட்டத்தில் பதிவுலகுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்திருக்கிறது .எல்லாம் தமிழ் மனத்தின் விருது நிகழ்வாலே.
தமிழ்மணம் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படைப்புக்களைத் தெரிவு செய்து விருது வழங்குகிறது. அந்தப் பிரிவுகளிலே
தாங்களை பிரபலமாக்கிய முக்கியமான ஒரு பிரிவை சேர்க்காததால் பல பிரபல பதிவர்கள் மனக்குமுரலில் இருக்கிறார்கள்.
தாங்கள் எவ்வளவுதான் போட்டி போட்டு தமிழை அடுத்த கட்டத்திற்கும் , தங்கள் வீட்டில் இருக்கும் மிக உன்னதமான கலாச்சாரத்தை
தமிழின் உன்னத கலாச்சாரமாக மாற்றுவதற்கும் பாடுபட்டு அந்த விடயங்களை எழுதினாலும் தமிழ் மனம் அதை தனது
தேர்வுப் பிரிவில் சேர்க்காததால் அந்தப் பிரபலங்கள் நொந்து போய் உள்ளார்கள்.
அடுத்தமுறையாவது ஏ ஜோக் எனும் அந்த உன்னத படைப்பை தனது பிரிவிலே தமிழ்மணம் உள்ளடக்கி அந்தப் பிரபலங்களுக்குரிய
அங்கிகாரத்தை வழங்கும் என நம்புகிறோம்.
புஸ்கி - இந்தப் பதிவில் நிறைய உள்குத்துக்கள் உள்ளன.
No comments:
Post a Comment