Tuesday, August 10, 2010

யதார்த்த முரண்பாடு

எனக்கு எது பிடிக்கிறதோ அதை மட்டுமே நான் செய்வேன்.யாரும் என்னை மாற்ற முடியாது.
இப்படி சொல்லிக் கொண்டே மற்றவர்களில் குறைசொல்லும் விமர்சகர்களில் நானும் ஒருவன்
அது ஒரு தவறு என்று நான் நினைக்கவில்லை.
யார் சொல்லியும் நான் திருந்தமாட்டேன் என்று இறுமாப்புக் கொள்ளுவது என்னை ஒரு பெரிய மனிதனாக காட்டிக் கொள்ளவே!
அதைப்போலவே மற்றவர்களில்  குறை கண்டுபிடிப்பதும் என்னை பெரிய மனிதனாக காட்டிக் கொள்ளவே!
ஆக இரண்டும் வேறு வேறல்ல.
யார் சொல்லியும் நான் திருந்தமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு என்னைத் திருந்து என்று சொல்கிறாய் என்று குறை கூறாமல் நீங்களும் என்னைப் போலவே மாறி விடுங்கள்.

இங்கே நான் என்பது சத்தியமாக நான் இல்லை!

No comments: