Tuesday, October 12, 2010

யாரிந்த பிரபலங்கள் ?

இலக்கம் 1

நான் ஒரு பிரபல எழுத்தாளர்.பிரபலம் என்றவுடனேயே பெரிதாக எண்ணிவிட வேண்டாம் .நித்தியானந்தரும் பிரபலம்தான் அதுமாதிரிதான் இது. அத்தோடு முக்கியம் நான் பிரபல எழுத்தாளர் என்று மட்டுமே சொன்னேன் சிறந்த எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லவில்லை.
சரி அதைவிடுத்து விடயத்துக்கு வருவோம்.
நான் இன்றைக்கு சரக்கடிக்க எண்ணியுள்ளதால் எனக்கு ஒருபோத்தல் பட்டை சரக்கும் , ஒரு தண்ணீர் பக்கற்ரும் கொஞ்சம் ஊறுகாயும் வேண்டியனுப்பும் நல்ல உள்ளம் கொண்ட ரசிகர்கள்  என்னைத் தொடர்பு கொள்ளவும். ஆர்டர் செய்ய முன் என்னிடம் சொல்லி செய்தால் ஒரே சரக்கை பல பேர்  வாங்கி அனுப்புவதை தவிர்க்கலாம் .
இதனால் என்னை பிச்சைக் காரன் என்பவர்கள் பற்றி எனக்கு அக்கறை இல்லை.
ஏனென்றால் நான் பிரபல எழுத்தாளர்.

......................................................................................................................................................................................................................................................................................................................
இலக்கம் 2

என்னடா இது ஒரு நாயும் பெண் பதிவர்களை திட்ட மாட்டேன் என்கிறது. நமக்கு வாயெல்லாம் எச்சில் ஊறிப் போய்க் கிடக்கு. கொஞ்சம் காறித் துப்புவம் என்றால் எவனும் பெண் பதிவர்களை சீண்ட மாட்டேன் என்கிரானுகள்.இப்படியே போனா நமக்கு எழுதவும் மேட்டர் இல்லாமல் போயிடுமே. விடக்கூடாது நானாவது பொய்  ID  யில் போய் யாராவது பெண் பதிவர்களை சீன்டியாக வேண்டும்.

இப்போதைக்கு எச்சிலை ஒரு ஒரு அண்டாவில் சேர்த்து வைப்போம் .பிறகு துப்ப தேவைப்படலாம். ச்ச் தூ ...அண்டா நிரம்பி வழிகிறது 


......................................................................................................................................................................................................................................................................................................................

இலக்கம் 3

என்னடா செய்யிறது இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் ஏ ஜோக்குக்கு எங்கே போறது.தமிழ் செக்ஸ் தளத்தில் இருந்த ஏ ஜோக்கெல்லாம் போட்டாச்சு. நமக்குத்தான் ஆங்கில அறிவு இல்லாட்டியும் ஆங்கில ஏ ஜோக்குளையும் `சிலது ஆங்கிலத்திலேயே இருக்கும் போதுதான் அழகாக இருக்கிறது` என்ற அடைமொழியோடு போட்டும் சமாளிச்சாச்சு.இனியும் ஏ ஜோக்குக்கு எங்கே போகிறது.


......................................................................................................................................................................................................................................................................................................................

இலக்கம் 4 

நான் கம்யூனிஸ்ட் .
ஆனாலும் எல்லோரும் நான் எழுதுவதைத்தான் சரி என்று சொல்ல வேண்டும். எனக்குத்தான் வாக்குப் போட வேண்டும். 
என்னை எதிர்த்தால் உங்கள் பேரை நாறடிக்கும் விதமாக எனக்கு எழுதத் தெரியாவிட்டாலும் சில லூசு நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லி எழுதி என் தளத்திலேயே போடுவன்..

....................................................................................................................................................................
இலக்கம் 5

அட நான் ஒரு லூசுங்க. நான் கதைப்பதெல்லாம் மனப் பிராந்து. எழுதுவதும் அப்படித்தான். இப்படி மனப் பிறந்து பிடிச்ச லூசுகள் படிச்சாலே போதும். மேலும் நான் சின்ன வயசில கள்ளத்தனமா படிச்ச மட்டமான ஜோக் படமெல்லாம் கூட போடுவன். நான் ஜோக்கியன் இல்லை என்று சொல்லிக்கொண்டுதான் போடுவன்.அதனால நான் செக்ஸ் படமே என் தலத்தில போட்டாலும் யாரும் கேட்கக் கூடாது. நான் ஒன்றும் என்னை ஜோக்கியன் என்று எப்போதும் சொன்னதே இல்லை.பருப்பு மாதிரி வந்து என் தளத்தை எந்த ஜோக்கியனையும் நான் கேட்கவில்லை. எட்டு வயசிலேயே இலக்கியாவை சிட்டு அடிக்க பள்ளிக்கு கட போடும் எனக்கு இலக்கியம் என்றாலே  அலர்ஜி.

அதனால நூறு வருஷம் கழிச்சுப் படித்தாலும் திட்டாமல் தயவு செய்து ஓடடு போட்டுத்துப் போங்க.
உங்களுக்காக நான் சின்ன வயசில படிச்ச மட்டமான ஜோக் எல்லாம் தமிழில் இருந்து அழியக் கூடாது என்ற நல்ல மனதோடு என் தளத்திலே சேகரித்து வைத்து உள்ளேன்.கடையம் படித்து ஓட்டுப் போடுங்க எஜமான்.

5 comments:

ப.கந்தசாமி said...

என்னங்க இது அநியாயம்? இவ்வளவு நல்ல பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போடுவதற்கு நாதி இல்லாத இந்த தமிழ் சமூகம் இருந்தால் என்ன, அழிந்தால் என்ன?

Radhakrishnan said...

பிரபலம் ஆகிருவீங்க சீக்கிரம். வாழ்த்துகள்.

ஆஹா கந்தசாமி ஐயா! ;)

Anonymous said...

???????????

பொன் மாலை பொழுது said...

// என்னங்க இது அநியாயம்? இவ்வளவு நல்ல பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போடுவதற்கு நாதி இல்லாத இந்த தமிழ் சமூகம் இருந்தால் என்ன, அழிந்தால் என்ன? //

-----DR.K.P. .KANDASWAMY.

வாய்விட்டு சிரித்தேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

கலக்கல்...